ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 13 ஜூலை, 2011

மறுபிறவி வழங்கியவர் முதல்வர் : டில்லி சிறப்பு பிரதிநிதி அசோகன்

திருவாரூர்: தமிழக அரசு சார்பில் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அசோகன் நேற்று திருவாரூர் வந்தார். அவ ரை சுற்றுலாமாளிகையில் திருவ õரூர் கலெக்டர் முனியநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து அசோகன் கூறியதாவது: அரசியல் வாழ்க்கையில் ம றுபிறவியை முதல்வர் ஜெயலலி தா எனக்கு வழங்கியுள்ளார். (தன் னை அறியாமலே கண் கலங்கினார்.) நான் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய பதவியை வழங்கியுள்ள முதல்வருக்கு வெறும் வார்த்தைகளால் மட்டும் எனது நன்றியை தெரிவிக்காமல் இந்த பதவிக்குரிய பணிகளை முழுமையாக செய்து தமிழகத்துக்கும், முதல்வர் ஜெயலிலதாவுக்கும் நற்பெயரையும் எடுத்து கொடுப்பேன்.







தமிழகத்துக்கு மட்டுமின்றி இம்மாவட்டத்துக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்வதிலும் எனது பணியை தொடருவேன். கடந்த ஐந்தாண்டு காலமாக பராமரிப்பு இல்லாமல் இருந்த டில்லி தமிழ்நாடு இல்லம் தற்போது முழுவதுமாக தூய்மைப்படுத்தப்பட்டு அங்குள்ள அண்ணாதுரை, திருவள்ளுவர் போன்றவர்களின் சிலைகளுக்கு தினமும் மாலை அணிவிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். ஆர்.டி.ஓ., ஸ்ரீராமன், அ.தி. மு.க., மாவட்ட பொருளாளர் பன் னீர்செல்வம், ஹோட்டல் சங்க தலைவர் கணேசன், மெடிக்கல் சங்க தலைவர் வீரையன் உட்பட பலர் வரவேற்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக