ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 25 ஜூலை, 2011

தாமிரபரணியில் உயிர்நீத்தோர் நினைவு தினம் : டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் அஞ்சலி


























நெல்லையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நினைவு நாளையொட்டி புதிய தமிழகம் கட்சியினர் க்ட்சியின் நிறுவனர்- தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தினர்.





கடந்த 99ம்ஆண்டு ஜூலை 23ம்தேதி கூலிஉயர்வு கேட்டு போராடி சிறையில் அடைக்கப்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விடுவிக்க வலியுறுத்தி நெல்லையில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்ற போது போலீசார் தடியடி நடத்தினர்.





இதில் ஒரு சிறுவன் உட்பட 17 பேர் தாமிரபரணி ஆற்றில் இறந்தனர்.இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜூலை 23ம்தேதியை தாமிரபரணியில் உயிர் நீத்தோர் நினைவு தினமாக அரசியல்கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.








புதிய தமிழகம் கட்சி சார்பில் தலைவர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமையில் நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மவுன ஊர்வலம் துவங்கியது. அண்ணாத்துரை சிலை முன்பு ஊர்வலம் நிறைவு பெற்றது.பின்னர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தாமிரபரணி ஆற்றில் மலர்வளையம் வைத்து வீர வணக்க அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக