ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

சாதிய தீயை பரப்பும் அரசியல் தலைவர்கள்..: ராமதாஸ் மீது ஜான்பாண்டியன் காட்டம் ....

சிதம்பரம்: தமிழகத்தில் சாதிய பிரச்சனைகள் குறைந்துவரும் நிலையில் சில அரசியல் தலைவர்கள் சாதிய தீயை பரப்புகின்றனர் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை மறைமுகமாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் சாடியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் சில பகுதிகளில் குறந்துள்ளது, சில பகுதிகளில் அதிகரித்துள்ளது. தற்போது. சாதிய பிரச்சனைகள் தமிழகத்தில் குறைந்துள்ளன. ஆனால் சில அரசியல் கட்சித்தலைவர்கள் சாதிய தீயை பரப்பி வருகின்றனர். இந்தத் தலைவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும். வன் கொடுமை சட்டத்திற்கு திருத்தம் செய்வது தவறாகும். அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக