ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

மள்ளரே பள்ளர் எனக்கூறும் அறிஞர்களின் கூற்று



    தமிழ் இலக்கியங்கள் யாவிலும் ஏர்த்தொழிலையும், போர்த்தொழிலையும் குலத்தொழிலாகக் கொண்ட மருத நிலக் குடிகளான மள்ளர்களே மரபு பிறழாமல் பண்டையக் குலத்தொழிலோடும், பண்பாட்டு வழக்காறுகளோடும் மரபறியும் வகையில் தடம் பதித்து வாழ்ந்து வருகின்ற பள்ளர்கள் என்பதைப் பல்வேறு அறிஞர் பெருமக்கள் ஆய்ந்தறிந்து கூறியுள்ளனர். அவ்வறிஞர் பெருமக்களின் கூற்றுகள் உரைக்கும் உண்மைகள் வருமாறு:

  • முனைவர் வின்சுலோ
          "இன்று தென்னகத்தில் வேளாண்மைத் தொழில் புரிந்து வரும் பள்ளர், மள்ளர் என்பதின் உச்சரிப்பு வேறுபாடு ஆகும்" என்கிறது வின்சுலோவின் தமிழ் ஆங்கில அகராதி (Dr.Winslow Dictionary pp.174).

  • டி.கே.வேலுப்பிள்ளை
          "பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் மள்ளர் பிற்காலத்தில் பள்ளர் என வழங்கலாயினர்" என்கிறார் டி.கே.வேலுப்பிள்ளை. (T.K.Veluppillai, Travancore State manual 1940)

  • முனைவர் சி.ஒப்பார்ட்
          "மள்ளர் பள்ளர் ஆனது உச்சரிப்பு வேறுபாடாகும்" என்கிறார் மேலை நாட்டு அறிஞரான சி.ஒப்பார்ட் (Dr.G.Hobart, Dravidians, The Original inhabitants of India, pp.101)

  • ஞா.தேவநேயப் பாவாணர்
           "பள்ளர் என்பவர் மள்ளர், மருதநிலத்தில் வாழும் உழவர்" என்கிறார் மொழி ஞாயிறு பாவாணர் (செந்தமிழ்ச் செல்வி 1975 ஏப்ரல் வெளியீடு)

  • ந.சி.கந்தையாப் பிள்ளை
          "பள்ள என்பது மள்ள என்பதன் உச்சரிப்பு வேறுபாடாகும். பண்டைய மள்ளரே இன்றைய பள்ளர்" என்கிறார் ந.சி.கந்தையா பிள்ளை (தமிழர் சரித்திரம் பக்.206 ). இக்கருத்தினைப் பண்டித சவரியாரும் வலியுறுத்துவார். இவ்விருவரும் யாழ்ப்பாணத்து அறிஞர்களாவர்.

  • சேலம் மாவட்டக் குடிக் கணக்கு
          1961 ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேலம் மாவட்டம் கணக்கன்கிரி ஊர் பற்றிய கையேட்டில் "பள்ளர் என்பவர் மருத நில மக்களாகிய மள்ளர்" எனக் கண்டுள்ளது.  (1961 Census of India, Vol.IX, Madras Part VI, Village Survey Monograph, Kanakkangiri Village, Salem District)

  • கேரளா பண்பாட்டு வரலாற்று நிகண்டு - II 
            எசு.கே.வசந்தன் என்பவரால் எழுத்தப்பட்டு,திருவனந்தபுரம், கேரள மொழிப் பயிற்சியகம் வெளியிட்ட கேரளப் பண்பாட்டு நிகண்டு பாகம் 2 பக்கம் 123 இல் பள்ளர் என்பவர் சங்க இலக்கியங்களில் மள்ளர் என அறியப்படுவதைத் தெளிவுபடுத்துகிறது. மலையாளத்தில் உள்ளவாறு.....
(விரைவில் அந்த பக்கம் இங்கே ஸ்கேன் செய்து பிரசுரிக்கப் படும்)

பள்ளன்
    "தெக்கன் திருவிதாங்கூரில் காணுன்னா தமிழ் கர்சகத் தொழிலாளிகள் யுத்தம் தொழிலாகிய கூடியான. அதினால் மள்ளர் என்னும் பறையும் - சங்க சகாத்தியத்திலே மள்ளர். இவர் மக்கத்தாயிகளான. வளரப்பெயர் கிருத்தவ மதம் சிவிகரிச்சு. பீர்மேடு பாங்களிலும் இவரக் காணும்."

இதன் தமிழாக்கம் வருமாறு....
பள்ளன்

    "தெற்குத் திருவிதாங்கூரில் காணப்படும் தமிழ் வேளாண் தொழில் மக்கள், போர்த் தொழிலையும் இனைந்து மேற்கொண்டதால் மள்ளர் என்றும் அழைக்கப் படுகின்றனர் -- சங்க இலக்கியங்களில் மள்ளர்கள், இவர்கள் தந்தை வழி நிலத்திற்கு உரிமையுடையவர்கள். இவர்களில் பெரும்பாலோனோர் கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டனர். பீர்மேடு பகுதிகளில் இவர்களைக் காணலாம்" என்கிறது கேரள பண்பாட்டு வரலாற்று நிகண்டு.

1 கருத்து:

  1. http://www.kamakoti.org/tamil/tirumurai39.htm
    திருமுறைத்தலங்கள்
    நடுநாட்டுத் தலம்
    திருத்தினைநகர் ( தீர்த்தனகிரி)
    மக்கள் வழக்கில் தீர்த்தனகிரி என்று வழங்குகிறது.
    தனிப் பேருந்தில் செல்வோர் கடலூர் - சிதம்பரம் மெயின் பாதையில், சிதம்பரத்திற்கு 45 - ஆவது கி.மீ.ல் ஆலப்பாக்கம் - புதுச்சத்திரம் இவற்றிற்கு இடையில் மேட்டுப்பாளையம் என்னும் இடத்தில் தீர்த்தனகிரி என்று கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் போய், தானூரையடைந்து, தெருக்கோடியில் இடப்புறமாகச் செல்லும் சாலையில் சென்று, மேலும் இடப்புறமாகப் பிரிந்து செல்லும சாலையில் சென்று இவ்வூரையடையலாம்.
    பெரியான் என்னும் பள்ளன் தன்நிலத்தை உழுதுகொண்டிருக்கும்போது இறைவன் அடியவராக வந்து அன்னம் கேட்க, அவன் தன் தொழிலை நிறுத்திவிட்டு உணவு கொண்டுவரத் தன் வீடு சென்றான். அவன் திரும்பி வருவதற்குள் இறைவன் அந்நிலத்தில் தினை விளைந்திருக்குமாறு செய்தார். வந்த பெரியான் கண்டு திகைக்க இறைவன் அவனுக்குக் காட்சி தந்தார். அதிசயமாகத் தினை விளைந்ததால் இத்தலம் 'தினைநகர்' என்று பெயர் பெற்றது.
    இறைவன் - சிவக்கொழுந்தீசர், சிவாங்கரேஸ்வரர், திருந்தீஸ்வரர்.
    இறைவி - நீலாயதாட்சி, ஒப்பிலாநாயகி, கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள்.
    தலமரம் - கொன்றை.
    தீர்த்தம் - ஜாம்பவ தீர்த்தம்.
    அஞ்சல் முகவரி -
    அ.மி. சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்
    தீர்த்தனகிரி - அஞ்சல் - 608 801.
    கடலூர் வட்டம் - கடலூர் மாவட்டம்

    ithai pattri thangal velieda vendum... tharpodu antha oril ulla anaivarum indrakula vanniar enru sollugirarkal... angu oru pallarum illai en south arcot dt kila pallar yarum illai ....aniavrum vanniyare .... periayan, manaivi name periyayi.. intha name angu ulla anaithu vanniyarkalum vaithu ullarkal... shiavkolundhu, periayan , periayayi name

    பதிலளிநீக்கு