ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 13 செப்டம்பர், 2014

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி: விதிமுறைகளை மீறியதாக கிருஷ்ணசாமி மீது வழக்கு


இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் கடந்த 11–ந் தேதி அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.
தலைவர்கள் அஞ்சலி செலுத்த குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்படி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.வுக்கு மாலை 3 மணிமுதல் 4 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.
ஆனால் அவர் அந்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வராமல் 4.20 மணிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் 5.30 மணி வரை அங்கேயே இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வேந்தோணி கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் பரமக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்படி விதிகளை மீறிய கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. புதிய தமிழகம் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கதிரேசன் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக