ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

கொம்பன் சர்ச்சை - தணிக்கை அதிகாரிகளின் பாகுபாடு!




ஏப்ரல் 2ந் தேதி வெளியாகிறது ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் முத்தையா இயக்கியுள்ள கார்த்தி நடித்த கொம்பன் திரைப்படம். படம் ‘யு’ சர்டிபிகேட்டுடன் வெளியாவதாகத் சின்னத்திரைகளில் விளம்பரம் வெளியாகிவரும் நிலையில், இப்படத்தால் சாதிரீதியிலான சர்ச்சையும் பதற்றமும் உருவாகும் என புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி புகார் தெரிவித்தார். 

தணிக்கைக் குழுவினர் இப்படத்தை நிராகரித்துவிட்டதாகவும் எனவே மறுதணிக்கை செய்யக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், “ஒரு படம் சென்சார் சர்டிபிகேட் பெறாத நிலையில் ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாது. அத்துடன் மறுஆய்வு செய்யவேண்டுமென்றால் அதற்கு சில நாட்கள் ஆகும். அதுவும் அலுவலக வேலை நாட்களில் தணிக்கை உறுப்பினர்கள் படத்தைப் பார்ப்பது வழக்கம். 

ஆனால் இதற்கு மாறாக விடுமுறை நாளான ஞாயிறன்று காலையில் கொம்பன் படம் சென்சார் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பல தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தின் நெருக்கடி கருதி இப்படிக் கோரியபோது சென்சார் இந்தளவு வேகமாக செயல்பட்டதில்லை.  

ஏற்கனவே அஞ்சான் உள்ளிட்ட தமிழ்ப் படங்களும் பல இந்திப் படங்களும் விதிமீறல்களுடனும் தனிப்பட்ட நலன்கள் கருதியும் சென்சார் செய்யப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகும் சென்சார் துறை பாரபட்சமாக செயல்படுகிறது என சினிமா வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். 

தேசம் முழுவதும் பாதிக்கும் அளவுக்கு தணிக்கை குழு மாறியிருப்பது கண்டிக்கத்தக்கது. நீ யார் கண்டிப்பதற்கு என்று கேட்டால், நான் கலைஞன் என்று பதில் சொல்லுவேன் என்று உத்தம வில்லன் திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கொம்பன் பட வட்டாரமோ, மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ள படத்தை வெளியிடுவதற்கு சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்கிறோம் என்கிறார்கள். தணிக்கை அதிகாரிகள் என்ன பதில் சொல்லப் போகிறார்களோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக