ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 12 அக்டோபர், 2016

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?..

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?..செப். 17–ராமநாதபுரம்,.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த ஒவ்வொருவருக்கும் தனித் தனியே நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதன்படி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. [மதியம் 2.00 மணி }.அவர் அந்த நேரத்தில் வராமல் சற்று தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து காட்டுபரமக்குடி கிராம நிர்வாக அலுவலர் தீர்த்த ரத்தினேஸ்வரன் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் விசாரணை நடத்தி டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பால்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக