ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 12 அக்டோபர், 2016

செப்டம்பர் 30: தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம்:வர்க்க போராளிக்கு வீர வணக்கம் ..!!!..


அடித்தால் திருப்பி அடி..!
அடக்கினால் அடங்க மறு..
வாடி என்றால் போடா என்று சொல்
ஏண்டி என்றால் ஏண்டா என்றேசொல் 
சாதி என்றால் மோதி நட
உழுபவனுக்கே நிலம் சொந்தம்
உழப்பவனுக்கே அதிகாரம்
என்று முழங்கினார் தோழர். பி.எஸ்.ஆர்
பார்பன, சூத்திர பண்ணைகளால்
காங்கிரஸ் பண்ணைகளும் ,
நீதிகட்சி பண்ணைகளும்
மிரண்டது
ஏழைக் கூலி விவசாயியின்
சுயமரியாதைக்காக எந்த ஒரு
திராவிட இயக்கமும் வரிந்து கட்டி
அவர்களுக்காக நிற்க்கவில்லை,
பட்டியல் விவசாயிக்காகவம்
பட்டியலின
பாதுகாவலர்களும் ஓர் இயக்கம்
கூட கண்டதில்லை,
களப்பால் குப்பு, சிவராமன் , வாட்டாக்குடி இரணியன் , ஆம்பலாபட்டு ஆருமுகம் போன்ற நெஞ்சுரம் மிக்க தலைவர்ககளையுன் உருவாக்கியவர் .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடும் நெருக்கடி கட்டுபாடு சமயதில் கூட 1952 இல் நடந்த தேர்தலில் வெளியில் வந்து பிரச்சாரம் செய்ய முடியாத சூழ் நிலையிலும் மக்களோடு மக்களாக வாக்குகள் சேகரித்து
கீழ தஞ்சை ( நாகை ,திருவாரூர் மாவட்டங்கள்) யில் மட்டுமே 9 சட்டமன்ற தொகுதிகளில் "தனித்து" வெற்றிகண்டதும்
இந்த மாபெரும் தியாகி
சீனிவாசராவ் அவர்களால் தான்.
மிகப்பெரிய கொடுமையான
சாணிப்பால்-சவுக்கடிக்கு
சாவுமணி அடித்தவரும்
இவர்தான்....,,,!சொந்த மண்ணில் நிலவுடைமையை இழந்த மண்ணின் மைந்தர்களான பள்ளர்கள் உ ள்ளிட்ட உ ழைக்கும் மக்களின் ஒளிவிளக்கு ..!!!
உழைக்கும் வர்க்கத்தை, தலைநிமிர வைத்த மாவீரன் தோழர் பி.சீனிவாசராவ்... அவர் புகழ் ஓங்குக ..!!!.
தியாகிகள் நாமம் வாழ்க...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக