ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீட்டுக்கான சட்டம் எதிர்த்து புதிய தமிழகம் கட்சி ஐகோர்ட்டில் மனு


சென்னை : அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவுக்குப் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனு: கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, 19 சதவீத இடஒதுக்கீடு வகை செய்வதற்கான சட்டம் உள்ளது. இடஒதுக்கீட்டு விதிகளை அமல்படுத்துவதில் பல குறைபாடுகள் உள்ளன. அருந்ததியினர் சமூகத்தில் உள்ள ஏழு பிரிவுகளுக்கு, முதல் இடம் ஒதுக்கப்படுவதன் மூலம், ஆதிதிராவிட சமூகத்தில் உள்ள, 69 பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இச்சட்டத்தால், ஆதிதிராவிட பிரிவுகளில் பிளவு ஏற்பட்டுள்ளது. எனவே, அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டம் செல்லாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது. மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக