ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.க.கிருஷ்ணசாமி



ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி விவசாயிகளுக்கு புதுக்கோட்டையில் விவசாய வளர்ச்சி கருத்தரங்கு நடைபெறுகின்றது.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.க.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் யூனியன் வேளாண் உதவி இயக்குனர் மோகன்ராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயராஜன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கனகராஜ், கருங்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அல்பிரட், விவசாய பொருட்கள் விற்பனை உதவி இயக்குனர் ராஜா, வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளர் சங்கர்ராஜ், இளநிலை பொறியாளர் சிதம்பரம், ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் அலாய்சியஸ் மேரி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ராமனுஜம், கள மேலாளர் அமிர்தலிங்கம், , கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனரக வல்லுநர் டாக்டர்.அசோகன் உள்ளிட்ட விவசாயத் துறை அதிகாரிகளும், பிள்ளைமுத்து, அயிரவன்பட்டி முருகேசன், நிக்கோலஸ் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாய மேம்பாடு குறித்து பேசினார்கள்.

கருத்தரங்கில் தலைமையேற்றுப் பேசிய டாக்டர்.கிருஷ்ணசாமி, விவசாயதஹி விட உலகில் உன்னதமான தொழில் ஒன்றும் கிடையாது. இன்று மெல்ல, மெல்ல நசிந்து போய்க் கொண்டு இருக்கின்றது விவசாயம். உழுபவருக்கு பின்தான் மற்றவர்கள் எல்லாம் செல்வார்கள் என இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பே திருவள்ளுவர் கூறியுள்ளார். பல்வேறு காரணத்தினால் இன்று நிலைமை மாறிவிட்டது. ஆயிரம் முதல் ஐயாயிரம் ஏக்கர் வரை நில மோசடி நடந்துள்ளது. விவசாயம் சாராத, உபயோகமில்லாத தொழிற்சாலைகள்தான் இங்கு அமைந்துள்ளது. காற்றை மாசுபடுத்தி, நிலத்தடி நீரை மாசுபடுத்தி, மண்ணை மாசுபடுத்தி, மூச்சை முடமாக்கும், மனிதர்களே வாழ முடியாத அளவில்தான் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. காரணம் விவசாயத்திற்கு முன்னிரிமை கொடுக்காமல் முக்கியத்துவபடுத்தாமல் விட்டு விட்டதுதான். இல்லையென்றால் உயிரைவிட அதிகம் நேசித்த மண்ணை மக்கள் இழந்திருக்க மாட்டார்கள். 1996ல் நான் வெற்றி பெற்றபோது ஸ்டெர்லைட் தொழிற்சாலை வரக்கூடாது என மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தினோம். பின்னர் பத்தாண்டுகளில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. இப்போது மீண்டும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்துள்ளீர்கள். ஒரு மாத காலத்தில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்துள்ளேன். தூத்துக்குடி திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் அனைத்து கிராமத்திலும் நின்று செல்கின்றது. அறுபதுக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தொழிற்சாலைகளுக்கும், பல கிலோ மீட்டர் தூரத்தில் சென்று நெடுஞ்சாலை பணிகளுக்கும் பயன்படுத்தினார்கள். இங்கே குடிநீர் ஆறு ரூபாய் விற்றது. இப்போது புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், புதுக்கோட்டை பகுதிகளில் விவசாய நிலத்தில் இருந்து தண்ணீர் வியாபாரம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பத்து தினங்களுக்குள் முற்றிலும் அவை நிறுத்தப்பட்டு விவசாயிகளின் நலன் காக்கப்படும். நள்ளிரவில், அதிகாலையில் திருட்டுத் தனமாக எடுத்து செல்வது தடுக்கப்படும். இல்லையென்றால் கிணறுகள் முழுவதும் வற்றி விடும். விவசாயம் பாழ்பட்டு விடும். விவசாயம் வளர, நிலத்தடி நீர் காக்கப்பட விவசாயிகள் விழிப்புணர்வோடு கண்காணிக்க வேண்டும்.
ஒரு சொட்டு நீர் கூட குடிக்க இல்லாமல், விவசாயத்திற்கு இல்லாமல் தொழிற்சாலைகளுக்கு அனுமதிக்க கூடாது. அதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் நேரில் உறுதியளித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது சில்லாநத்தம் கிராம மக்கள் மோசடியாக நிலம் பட்டா போடப்பட்டதாக புகார் தெரிவித்தனர். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இனி ஒரு சென்ட் நிலம் கூட போலி பட்டா போட ஓட்டப்பிடாரம் தொகுதியில் அனுமதிக்க கூடாது. சட்டசபையில் பதினைந்து நிமிடம் ஒதுக்கினார்கள் அதில் கன்னடியன் கால்வாய் குறித்து பேசினேன். ஒரு பகுதி மக்களின் கண்ணீரை எடுத்து இன்னொரு பகுதி மக்களுக்கு பன்னீரை தெளிப்பதா என்று கூறினேன். கன்னடியன் கால்வாய் உயரத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதிகாரிகள் முழு மனதோடு, நல்லெண்ணத்தோடு உங்களுக்கு உதவ வந்துள்ளார்கள் எனவே விவசாயத்திற்கான உரம் சரியாக வந்து சேரும். உர மூட்டைகள் வேறு எங்கும் மொத்தமாக செல்லாது. கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்கிட உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இன்னும் ஒரு வருடத்திற்குள் பத்தாயிரம் ஏக்கர் அதிகமாக விவசாயம் செய்ய வேண்டும். ஓட்டப்பிடாரம் தொகுதியில் விவசாயம் இரு மடங்காக உயர வேண்டும். சொட்டு நீர் பாசனம் மானியம் பயன்படுத்த வேண்டும்.
குலையன்கரிசல், கூட்டாம்புளி, அத்திமரப்பட்டி பகுதியில் வாழை மட்டும் போடாமல் மஞ்சள், கரும்பு, நெல் என மாற்றுப் பயிர்கள் பயிரிட வேண்டும். ஒருங்கிணைந்த விவசாயம் செய்வதில் ஈடுபட வேண்டும். தண்ணீர் வறட்சியான பகுதியான கோவை, நாமக்கல், ராசிபுரம் பகுதகளில் விவசாயம் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். ஒரு வீட்டில் ஐம்பது நாட்டுக் கோழி வளர்த்தால் முட்டை ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். பெண்கள் வீட்டில் இருந்து இதை செய்யலாம். ஐந்து ஏக்கரில் கோழி பண்ணை வைக்கலாம். ஓட்டப்பிடாரம் பூமி நல்ல வளமான பூமியாக மாற்ற என்றும் உறுதுணையாக இருப்பேன். வரும் புதன்கிழமைக்கு பிறகு மண் பரிசோதனை செய்கின்றார்கள். நாளை பொதுப்பணித்துறை, யூனியன் குளங்கள் சுற்றிப் பார்க்க உள்ளேன்" என்று பேசினார். தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மழைப் பயிர்கள் துறை மத்திய அரசின் உதவியுடன் கூடிய நுண்ணிர்ப் பாசன திட்டத்தின் கீழ் அரசு மானியம் பெற இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை வேளாண்மை விற்பனை மையத்தின் சார்பில் மானிய விலையில் உளுந்து விதைகள் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக