ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 15 டிசம்பர், 2012

ஓரணியில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள்




இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை வென்றெடுக்கும் விதமாக  மகாராஷ்டிரா மாநிலத் தலைநகரான மும்பையில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் ஒன்றிணைந்த கூட்டம் நடைபெற்றது.மும்பையில்   டிசம்பர் 12 அன்று நடைபெற்ற கூட்டத்தில் லோக் ஜனசக்தி ராம்விலாஸ்  பாஸ்வான்,இந்தியக் குடியரசு கட்சித் தலைவர். ராம்தாஸ் அத்வலே , புதிய தமிழகம்  கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைவர்கள் ஒன்று கூடினர்.
இதில் கலந்து கொண்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர்  டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் “ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஒற்றுமை அவசியம்,சம உரிமையை வென்றெடுக்க ஓரணியில்,ஒரே அரசியல் இயக்கமாக திரள வேண்டும்,மத்திய,மாநில அரசுகளின் அரசியல் அதிகாரத்தில் பங்கெடுக்க அனைத்து மக்களும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்” என்று தனது கருத்துக்களை முன் வைத்தார்.
முன்னதாக கோவையில் இருந்து விமானம் மூலம் மும்பை  வந்த டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களுக்கு மும்பை வாழ் தேவேந்திர குல வேளாளர் சர்பாக பூமிநாதன்,ராமையா,சூசை உள்ளிட்ட ஏராளமானோர் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக