ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

ராஜபக்ஷேவிற்கு எதிர்ப்பு - ஆனால் போராட்டம் இல்‌லை


ராஜபக்ஷேவிற்கு எதிர்ப்பு - ஆனால் போராட்டம் இல்‌லை : கருணாநிதி # எனது மகளின் தாயார் என்றாலும் எனது மனைவி என்று சொல்ல மாட்டேன் , மத்திய அரசாங்கத்திற்கு கண்டனம் ஆனால் ஆதரவு வாபசில்லை , தண்டவாளத்தில் தலை வைப்பேன் ஆனால் ரயில் வராது ....... பிரபாகரனை ஆதரிக்கவில்லை , ஆனால் இறந்த புலிகளுக்கு இரங்கற்பா வாசிப்பேன் .... சாமியார்களை கண்டிப்பேன் ஆனால் சாய்பாபாவிடம் குங்குமம் வாங்கிக் கொள்வேன் ..
...முதுகெலும்பில் அறுவை சிகிச்சை என்று கூறுவேன் , ஆனால் மல்லாக்க படுத்துக் கொண்டு போஸ் கொடுப்பேன் .... கண்ணகிக்கு சிலை எழுப்புவேன் , ஆனால் கண்ணியம் இல்லாமல் பெண் உறுப்பினரைப் பாவாடையை தூக்கிப் பார்க்கச் சொல்வேன் , டெசோ ஈழத்திற்கு போராடும் , ஆனால் தனி ஈழ தீர்மானங்கள் இருக்காது , போர் நின்றுவிட்டது என்று பிரணாப் தான் தவறான செய்தியைக் கொடுத்தார் என்பேன் , ஆனால் அவர் ஜனாதிபதி ஆவதற்கு நான் முதல் ஆளாக முன்மொழிவேன் .... அதே வரிசையில் , இப்பொழுது ராஜபக்சேவை எதிர்ப்பேன் , ஆனால் போராட்டமில்லை .....இதனால் தான் என்னை அந்தர் பல்டி ஆரூர் தாத்தா என்று என்னை அழைக்கிறார்கள் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக