ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 8 ஜனவரி, 2014

தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும்: கிருஷ்ணசாமி....

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் தென்காசியில் நடந்தது. அக்கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தாமிரபரணி நதி மாசுபடாமல் பாதுகாக்க மக்கள் இயக்கம் உருவாக்கப்படும்.
தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், பொதுக்குழு தீர்மானங்களை விளக்கி அனைத்த மாவட்டங்களிலும் ஜனவரி 22 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின் டாக்டர் கிருஷ்ணசாமி பேசும்போது, ''தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் இடம் பெற்றிருப்பதற்கு பொதுக்குழுவில் முழு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதை சொல்வதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.

தி.மு.க. கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் பல புதிய கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது. இதனால் தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணியாக உருவாகும். புதிய தமிழகத்தை பொறுத்தவரை எப்பவுமே தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம். தென் தமிழக மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் வகையிலும், அங்கீகாரம் கிடைக்கும் வகையிலும் நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரத்தை முன்நிறுத்துவோம்.

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர்களை முன்னிறுத்தி தேர்தல் நடத்திய வரலாறு இதுவரை கிடையாது. தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்ற எம்.பி.க்களின் அடிப்படையில்தான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறார். தேசிய அரசியலில் கடந்த 20 ஆண்டுகளில் மாநில, பிராந்திய கட்சிகளின் ஆதிக்கம் தான் அதிகம் இருந்திருக்கிறது" என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக