ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 7 நவம்பர், 2011

ஜெயலலிதா காட்டும் விசுவாசம்...!




விசுவாசம் : ஒன்று                                   

           மறைந்த முத்துராமலிங்கதேவர் பிறந்த நாளையொட்டி நேற்று  சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு  தமிழக முதல்வர் ஜெயலலிதா  மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முதல்வரின் தோழி சசிகலா,  அமைச்சர் பெருமக்கள், சென்னை மேயர் மற்றும் பெருவாரியான அதிமுக தொண்டர்கள் புடைசூழ நடைபெற்றது.
                  இதே சமயத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஜெயலலிதாவின் அமைச்சர்கள் பத்து பேர் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். இந்த பத்து பேரும் மக்கள் பணத்தை செலவு செய்து அங்கு சென்று அஞ்சலி செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். 
              ஜெயலலிதாவின் இந்த செயலை பார்த்து முத்துராமலிங்கதேவர் ஒன்றும் மனம் குளிரப்போவதில்லை. ஆனால்   யாரை குளிரவைக்கிற  வேலை இது..?  யாருக்கு காட்டுகிற விசுவாசம் இது...? 
                   பரமக்குடியில் இமானுவேல் சேகருக்கு அஞ்சலி செய்ய இந்த அமைச்சர்கள் போகாததேன்..? அஞ்சலி செய்ய அமைதியாக கூடிய மக்களை கலவரப்படுத்தி, ஏழு பேரை சுட்டுக் கொன்றது  ஏன்..?  யாருக்கு காட்டுகிற விசுவாசம் இது..?
                இது ஓட்டுக்கான விசுவாசமா...? அல்லது  தன் தோழி சசிகலாவுக்கு காட்டுகிற விசுவாசமா...?
         விசுவாசமாக ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா  விசுவாசம் காட்டப்போவது  எப்போது...? இதை நான் கேட்கவில்லை மக்கள் கேட்கிறார்கள். பதில் சொல்வாரா ஜெயலலிதா...?

விசுவாசம் : இரண்டு                                

               இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஊழலை பக்கத்துல வெச்சிகிட்டே ஊழலை ஒழிக்கப் போறேன்னு ஒரு ஆசாமி ரதத்தை கெளப்பி விட்டுட்டு இவரு மட்டும் விமானத்துல ஏறிப் பறந்து போகவேண்டிய ஊருக்கு போயிடுவாராம். அந்த ரதம் மட்டும் பாவம் தனியா அந்த ஊருக்கு வந்து சேர்ந்துடுமாம். இந்த ஆசாமி வழியில கைய காட்டி ரதத்தை நிறுத்தி ஏறிக்குவாராம்.  ஊருக்குள்ள வரும் போது கைய ஆட்டிகிட்டே போவாராம்.  ஆசாமி மட்டும் விமானத்துல பறந்துடுராருங்க... அந்த ஆசாமி வேறு யாருமில்லை.. பிரதமர் பதவிக்கு அலைஞ்சிகிட்டு இருக்கிற அத்வானி தான்..  ஆனா ரதம் மட்டுமே இந்தியா முழுதும் சுத்திகிட்டு இருக்கிறதா சொல்லுறாங்க...
              அந்த ரதம் தான் சென்ற வாரம் தமிழகத்தில் மதுரைக்கு வந்தது. அத்வானியும் விமானத்தில் மதுரை வந்து சேர்ந்தார். பின் மதுரையிலிருந்து திருநெல்வேலி செல்லும் போது திருமங்கலம் அருகே   வழக்கம் போல் வெடிகுண்டு ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். தமிழகத்திற்கு அத்வானி வருகிறார் என்றால் அவருக்கு முன்னாடியே  வெடிகுண்டும் வந்து உட்கார்ந்துவிடும். அதுபோல் தான் இம்முறையும் அவர் போகும் பாதையில் பாலத்திற்கு அடியில் வைக்கப்பட்டதாக ஒரு பைப் வெடிகுண்டினை கண்டெடுத்திருக்கிறார்கள்.
               அதை பார்த்த பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கூட கண்டுகொள்ளவில்லை. ஆனால் தமிழக முதல்வர்  ஜெயலலிதா மட்டும் பதறிவிட்டார். உடனே விசாரணைக்கு உத்திரவு இட்டார்.
               அதுமட்டுமல்ல, அந்த பாலத்திற்கு அடியிலிருந்து பைப் வெடிகுண்டை கண்டுபிடித்த இரண்டு அதிபுத்திசாலிகள் அதிமுகவை சேர்ந்தவர்களாம். உடனே தன் குழந்தைகள் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார்கள் என்று அம்மா அவர்களை அள்ளி உச்சி முகர்ந்திருக்கிறார். இன்று அவர்களை சென்னைக்கு அழைத்து இருவருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
                  இன்றையிலிருந்து அதிமுக புத்திசாலிகள் எல்லாம் மூலைமுடுக்கெல்லாம் வெடிகுண்டை தேட ஆரம்பித்துவிடுவார்கள். இனி மேல் தமிழ்நாட்டுல  வெடிகுண்டா கெடைக்கப்போவுது பாருங்க...
           அது சரி... ஜெயலலிதாவின் இந்த செயலும் யாரை திருப்பிப்படுத்த..? ஏற்கனவே காவிக்கட்சியின் பக்கம் இவருக்கு ஒரு தனி விசுவாசம் உண்டு..  அந்த விசுவாசம் தானோ இது..? அந்த குண்டு வெடிக்கக்கூட இல்லை. அதற்குள் இவ்வளவு ஆர்ப்பாட்டம்.. பரமக்குடியில் ஏழு அப்பாவிகளை போலீஸ்காரர்களின் குண்டுகள் துளைத்தனவே, அந்த போலீஸ்காரர்கள் மீது ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தார்...? அது யாருக்கு காட்டுகிற விசுவாசம்..?  இது யாருக்கு காட்டுகிற விசுவாசம்..? இதை  நான் கேட்கவில்லை... மக்கள் கேட்கிறார்கள்...! பதில் சொல்லுவாரா ஜெயலலிதா...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக