ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 18 நவம்பர், 2011

தொடரும் ஆதிக்க சாதி மனநிலையும், நமது மௌன வன்முறையும்...


தோழர் இளம்பரிதி:
ilamparithi_360தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் கூட சாதியத்தை மனிதன் சுமந்தபடியேதான் உள்ளான். இந்தப் பரமக்குடி படுகொலைகளை தொடந்து FaceBook-ல் நடைபெற்ற விவாதங்களில் கூட சாதிப் பெருமையை பேசியபடியும், இந்த படுகொலைகளை ஆதரித்து கருத்து தெரிவிக்கிறனர். எனவே சாதி சமூகத்திலிருந்து நீங்க உளவியல் ரீதியான மாற்றம் வர வேண்டும். நாம் சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றி பரமக்குடி படுகொலைகளுக்குப் பிறகுதான் பேசுகிறோம். அவ்வாறில்லாமல் எல்லா காலங்களிலும் தொடர்ந்து பேச வேண்டும். எல்லாக் கட்சிகளிலும் முக்கியப் பதவிகளில் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களே அமர்ந்து கொள்கின்றனர். எனவே அவர்கள் இது போன்ற சாதீயப் பிரச்சினைகளை இருட்டடிப்பு செய்கின்றனர். தமிழ் தேசியம் பேசுபவர்களும், முற்போக்கு என்று சொல்லிக் கொள்பவர்களும் சாதிப் பிரச்சினைகளை பற்றி பேச வேண்டும். சில முற்போக்கு இயக்கங்களில் கூட சாதி ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
அடித்தட்டு சாதி மக்களுக்காக போராடுபவர்கள் ஆதிக்க சாதியில் இருந்தும் வரவேண்டும். அவ்வாறு வந்தால் அவர்களோடு இணைந்து போராட நாங்கள் தயாராக உள்ளோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக