ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 2 நவம்பர், 2011

பரமக்குடி துப்பாக்கிச்சூடு பதிலில்லா பல கேள்விகள்.


    
செப்டம்பர் 11-தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று காவல்;;துறை நடத்திய கொலைவெறி துப்பாக்கிக்சூட்டில் 6 தலித் மக்கள் கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்து  ஒரு மாதம் ஆகப்போகிறது. தமிழக அரசு இந்தப் பிரச்சனையில் பெரும் மௌனத்தையே கடைபிடித்து வருகிறது. கொலையானவர்கள் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபாயையும், ஒரு நபர் கமிசன் ஒன்றையும்  அமைத்து விட்டதோடு பிரச்சனை முடிந்து போய் விட்டது என கருதுகிறார்கள் போலும்.
     தங்கள் சமூகத்தின் மீதான அடக்குமுறைகளை தடுக்க முடியாத , அடிப்படைப் பிரச்சனைகளைக்கூட தீர்க்காத , மிகப்பெரும் ஊழல் முறை கேடுகளில் ஊறித்திளைத்த தி.மு.க. அரசை மாற்றிட நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த சட்டசபைக்கான தேர்தலில் அ.தி.மு.க-வை ஆதரித்து வாக்களித்த மக்கள், சமூக ஒடுக்குமுறை  எதிர்ப்பு போராட்டத்தின் அடையாளமாய் கருதும் தங்கள் தலைவர்  இமானுவேல் சேகரன் குருபூஜையை  சிறப்பாக நடத்திக் காட்டி அரசே இந்த விழாவை ஏற்று நடத்திட கோரிக்கை வைப்பது என்று இந்த ஆண்டு அமைதியாக விழாவை நடத்திட முயன்ற தேவேந்திரகுல மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து அந்த விழாவையே யுத்தக்களமாய் மாற்றி, துப்பாக்கிச்சூடு  நடத்தி 6 தலித்துகளை கொலை செய்து தீராத களங்கத்தைச் சுமந்து கொண்டது அ.தி.முக அரசு .
    இத்தனை உயிர் பலிகள் நடந்த பிறகும் தனது பொருப்பில் உள்ள காவல்துறையை பாதுகாக்கும் நோக்கத்தில், கமுதி தாலுகா எம்.பள்ளபச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் பழனிக்குமாரின்  படுகொலையோடு தொடர்புப்படுத்தி அதற்கு ஒரு காரணத்தைச்சொல்லி நடந்த கொடுமைக்கு சாதிக் கலவரமுலாம்  பூச முதல்வர் முயன்றது அதிர்ச்சியானது. 9.9.11 அன்று பழனிகுமாரின் படுகொலை நடந்தது.  10-ம்தேதி  முழுவதும் தேவேந்திர குல மக்கள் திரட்சியாய் வாழும் பகுதிகளில் கூட எந்த சிறு அசம்பாவிதங்களும் நடைபெறாத நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு எம்.பள்ளபச்சேரி  மாணவரின் படுகொலையுடனான தொடர்ச்சி என சட்டமன்றத்திலேயே  முதல்வர் ஜெயலலிதா பேசியதும், அவர் கூறிய சுவரெழுத்துப் பிரச்சனை மண்டல மாணிக்கத்திற்கு அருகேயுள்ள கிராமங்களுக்கே தெரியாத நிலையில் உலகமே அறிய உரத்து பேசியதற்கும் வேறு ஏதும் காரணம் இருக்குமோ என்கிற சந்தேகங்களை பிற சமூகங்களை சேர்ந்த நடுநிலையாளர்களே விவாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நடந்து முடிந்து போன இந்த கொலை பாதக நிகழ்வுக்கு காவல்துறை சொன்ன காரணம்  ஜான்பாண்டியன் கைது, எதற்காக அவரை கைது செய்ய வேண்டும். அவர் முகவை மாவட்டத்திற்குள் வந்தால் கலவரம் ஏற்பட்டு விடும். அதைத்தடுக்க என்றார்கள். ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்ட வல்லநாட்டிற்கு  வருவதற்குமுன் தூத்துக்குடி –நெல்லை-மாவட்டங்களில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவி;ட்டுத்தான் வந்துள்ளார்.  அந்த பகுதிகளில் கலவரம் ஏதும் நடந்ததாய் செய்தி ஏதும் இல்லை, ஆனால் அவரை கைது செய்துவிட்டு பரமக்குடியில் காவல் துறையினரே தங்களின் நரவேட்டையை நடத்தி முடித்தனர்.

    இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒரு கட்சியின் தலைவரை ஆளுகிற அரசு நினைத்தால் அந்த ஊருக்கு போகாதே. இந்த நிகழ்ச்சிக்கு போகாதே என தடை போட முடியும் மீறி அவர் சென்றுவிட்டால் என்ன ஆவது என முன் கைது செய்யலாம் என்பதும்  தங்கள் அமைப்பின் தலைவரை விடுதலை செய் என தொண்டர்கள் போராடினால் எந்த சட்ட நெறிமுறையும் இன்றி துப்பாக்கி சூடு நடத்தி கொன்று குவிப்பதும் எந்த வகை ஜனநாயகம்?. 
    புரமக்குடியில்தான் போராடினார்கள். மதுரை சிந்தாமணி, இளையான்குடி போன்ற இடங்களில் ஒரே சமயத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது எதற்காக? இது உள் நோக்கத்துடன் காவல்துறை திட்டமிட்டு நடத்pய கொலைவெறித்தாண்டவம் என உயிhகளை பறிகொடுத்தவர்களின் உறவுகள் எழுப்பும் சந்தேகத்திற்கு எவரும் பதில் தரவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்திட உத்தரவிட்டவர் யார் என இதுவரை யாருமே சொல்லாதது மர்மமாயுள்ளது.
    பாதுகாப்பிற்காக எனும் பெயரில் பல காவல்துறை உயரதிகாரிகள் ஆயிரக்கணக்கில் காவலர்கள் படையோடு  இருந்தும் 50 பேர்  நடத்திய மறியலைக் கையாள முடியாமல்  போனது தமிழக காவல்துறையின் திரனை கேள்விக்குறியதாய் ஆக்கியுள்ளது.
    தங்களின் பலகீனங்களை மறைக்க மாவட்டம் முழுமைக்கும் 144 தடை ஆணையை அமுலாக்கி 1400 பேருக்கு மேல்  பொய் வழக்கு பதிவு செய்து இரவு தேடல் எனும் பெயரில் தேவேந்திரகுல மக்கள் வாழும் அனைத்து கிராமங்களிலும் அத்துமீறி நுழைந்து வெறியாட்டம் போட்டதும் , பெண்களிடம் அநாகரீகமாய் நடந்து கொண்டதும் கொடுமையின் உச்சம்.
    இந்த அச்சுருத்தலுக்கு பயந்து ஆண்கள் இரவு நேரங்களில் காடுகளில் பதுங்கி உறங்கியதும் இதில் விசப்பூச்சி மற்றும் பாம்புகள் கடித்து மருத்துவம் பார்க்கும் கொடுமையும் இதில் ஒருவர் இறந்;து போன துயரமும் நிகழ்ந்தது. பிரச்சனையை  தீவிரமாக்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னனி உள்ளிட்ட அரசியல்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கண்டனம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் 144 தடை ஆணை , இரவுத்தேடல் கைவிடப்பட்டாலும் 1400 பேர் மீதான வழக்கு அச்சமூட்டுகிறது.
    செப்டம்பர்-11  துப்பாக்கிச்சூடு நடந்ததும் 13-ம் தேதி தமிழ்நாடு தீண்டாமை ஒழப்பு முன்னனி 
15-ம்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குழு 21-ம் தேதி உதவி நிதி தலா 25,000 வழங்கி ஆறுதல் கூற வந்த மார்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஸ்ணன் ஆகியோரோடு சென்ற போதும் 2.10.11 அன்று பரமக்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோதும், கொடுமலூர் வீரம்பல் சடையனேரி பல்லான்வலசை, மஞ்சூர் காக்கனேந்தல் கிராம மக்கள் நடந்த கொடூரமான நிகழ்ச்சியின் அதிர்ச்சி நீங்காத  பல கேள்விகளை முன் வைத்தனர் . அது மனதை உலுக்கியது.
•    அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டு ஆட்சிக்கு கொண்டு வந்ததற்கு  அவங்க தர்ர பரிசு இதுதானா?
•    சுhதிப்பெயரால அடிவாங்கர எங்கள சர்க்காரே அடிக்கிறது நியாயமா?
•    ஏழைகளோட உயிருக்கு விலை 1 லட்சம் தானா?
•    சுட்டுக் கொன்னவங்க ரோட்டுல திரியரப்போ நாங்க மட்டும் எப்ப கைது செய்வாங்களோனு பதட்டத்தோட திரியுரோமே. –கொன்னவங்களுக்கு தண்டனை ஏதும் இல்லையா..?
உள்ளங்களை உறைய வைத்த இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்லுமா? புதில் சொல்ல வேண்டும், சொல்லும்படி  வைக்க வேண்டும.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக