ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

கீழ்வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி - புதிய தமிழகம்



 
கீழ்வெண்மணியில் எரித்துக் கொல்லப்பட்ட 43 ஒடுக்கப்பட்ட வேளாண் குடிமக்களுக்கு வரும் 25ஆம் தேதி புதிய தமிழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :

இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியும் சமுதாய பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்படவில்லை. பிறந்த நாட்டில் மூன்று சென்ட் வீட்டு மனையோ, ஒரு ஏக்கர் நிலமோ கூட சொந்தமாக இல்லாமல் இன்னமும் வறிய நிலையில் வாழ்வோர் எண்ணற்றோர்.

இந்த நிலை போக்க எத்தனையோ போராட்டங்கள் நடந்திருப்பினும், 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தஞ்சை மண்ணாம் - கீழ்வெணிமணியில் நடந்த துயரச் சம்பவத்தை யாராலும் மறக்க இயலாது.

உழைத்த உழைப்பிற்காக அரைப்படி நெல் கூடுதலாக கேட்டதற்காக முதியோர், பெண்கள், குழந்தைகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் 43 பேர் ஒரே குடிசையில் அடைத்து கொளுத்தப்பட்ட துயரச் சம்பவம் நடந்த நாள் அது. தியாகம் புரிந்தவர்கள் விவசாயத் தொழிலாளர்கள் எனினும் அவர்கள் அனைவரும் வீரம் செறிந்த வேளாண் குடிமக்கள் என்ற சமூக அடையாளம் அறவே மறைக்கப்பட்டுவிட்டது.

அம்மக்களின் அளிப்பரிய தியாகத்தை போற்றும் வகையில் புதிய தமிழக கட்சியின் சார்பாக எனது தலைமையில் கீழ்வெண்மணி கிராமத்தில் அவர்கள் நினைவிடத்தில் டிசம்பர் 25ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் அஞ்சலி நடைபெறும்.

அதேபோல, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், புதிய தமிழகம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சார்பாக நினைவஞ்சலி நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறேன் என்று கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக