ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 1 பிப்ரவரி, 2014

விளக்கம் தராத அமைச்சர்கள்... டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு .......

விளக்கம் தராத அமைச்சர்கள்... டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்புசென்னை: தனது புகாருக்கு அமைச்சர்கள் விளக்கம் தரவில்லை என்று கூறி சட்டசபையிலிருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார். சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார். அப்போது அவர், முதலீட்டாளர்கள் மீது தமிழக அரசு அக்கறை காட்டுவதில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் இதுதொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சரின் விளக்கத்தையும் கோரினார். மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வேண்டும் என்றும் அவர் கோரினார். அதற்கு கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் விளக்கம் அளித்தார். பின்னர் எழுந்த கிருஷ்ணசாமி, இந்த பதிலில் திருப்தி இல்லை என்று கூறி மீண்டும் பேச முயன்றார். இதற்கு அனுமதி கிடைக்காததால் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார். அதேபோல மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர். ஏற்கனவே திமுக தொடரைப் புறக்கணித்து விட்டது. தேமுதிகவும் புறக்கணித்து விட்டது. டாக்டர் கிருஷ்ணசாமியும் தொடர்ந்து வெளிநடப்புச் செய்து வருகிறார். மனித நேய மக்கள் கட்சியும் வெளிநடப்புச் செய்து வருகிறது. இதில் தேமுதிகவைத் தவிர மற்ற கட்சிகள் இரண்டுமே திமுக கூட்டணிக்கு சமீபத்தில் வந்தவை என்பது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக