ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

திருச்சி மாநாட்டில் கிருஷ்ணசாமி பேச்சு..

திருச்சி: தி.மு.க கூட்டணிக்கு யாராவது வந்தால் அவர்களுக்குத்தான் லாபமே தவிர எந்தவிதக் குறைவும் ஏற்பட்டுவிடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.
 
திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற திமுக 10வது மாநில மாநாட்டில் கூட்டணி கட்சித் தலைவர் என்கிற முறையில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய  கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ, "கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தோம். மூன்று வருடத்திற்குள் ஒரு மாற்று முடிவு எடுக்கும் சூழல் ஏன் வந்தது?
பெரும்பாலும் ஆளும்கட்சி கூட்டணியில் இருந்து யாரும் வெளியே வரமாட்டார்கள்.வரக்கூடிய சூழ்நிலை உருவாகாது. ஆனால் எங்களுக்கும்  மனிதநேய மக்கள் கட்சிக்கும் அந்த சூழல் வந்துவிட்டது. நானும், மனித நேய மக்கள் கட்சியும் ஒரு முடிவு எடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுக கூட்டணிக்கு வந்திருக்கிறோம் என்று சொன்னால் எந்தவித உள்நோக்கமும், சுயநலமும் இல்லை.

தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களுக்காக பேச வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்துத்தான் அதிமுக கூட்டணிக்கு சென்றோம். ஆனால் திமுக எம்எல்ஏக்கள் உள்ளே நுழைந்தாலே வெளியேற்றப்படுகிறார்கள். நாங்கள் பேசினால் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. நாங்கள் அவை மரபை மீறியதில்லை. ஆனாலும் எங்களுக்கு  சட்டமன்றத்தில் பேச வாய்ப்பில்லை என்று சொன்னால் அதிமுகவோடு கூட்டணி வைத்து என்ன பலன். இனிமேல் திமுக கூட்டணிக்கு யாராவது வந்தால் அவர்களுக்குத்தான் லாபமே தவிர, நமக்கொன்றும் எந்தவிதக் குறைவும் ஏற்பட்டுவிடப்போவது கிடையாது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக