ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

அதிமுக ஆட்சி சமூகநீதிக்கு எதிரானது சிறுபான்மை மக்களுக்கும் எதிரானது பேரா.ஜவஹிருல்லா, டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி ........


அ.தி. மு.க. ஆட்சி சமூக நீதிக் கொள்கைகளுக்கு எதிரா கவும், ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிராக - சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு எதிராகவும் செயல்படுவதால்ஆளுநர் உரையைப் புறக்கணித்து பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்ததாக மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் முனைவர் ஜவா ஹிருல்லா, புதியதமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் குறிப் பிட்டனர்.
நேற்று (30.1.2014) ஆளு நர் உரையைப் புறக்க ணித்துவெளிநடப்புச் செய்த மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் ஜவஹிருல்லா செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-
இன்று சட்டப் பேர வையில்ஆளுநர் உரையாற்றத் தொடங்கும் போது, மனிதநேய மக்கள் கட்சி சில கருத்துக்களைச் சொல்ல முற்பட்டது. அதாவது முஸ்லிம்க ளுக்கு இடஒதுக்கீடு அதிகரித்துத் தரப்படும் என சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பும் ஆட்சிக்கு வந்தபிறகும் முதலமைச்சர் ஜெயலலிதா எங்களுக்கு வாக்குறுதி தந்தார். ஆட் சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகப் போகி றது. ஆனால் சொன்ன வாறு அவர்கள் வாக்குறு தியை நிறைவேற்றவில்லை.
2009 திருமணச் சட் டத்தில் திருத்தம் கேட் டோம். அதையும் அவர் கள் செய்யவில்லை. அவைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கிப் பேரணி நடத்தினோம். காவல் துறையை வைத்து பலகெடுபிடிகள் செய்தும் லட்சக்கணக்கில் முஸ்லிம் கள் திரண்டனர்.
மேலும் புதிதாக உரு வாக்கப்படும் பல்நோக்கு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் நியமிப்ப தில் சமூக நீதிக்கு எதிராக இடஒதுக்கீட்டு முறையை கடைப்பிடிக்க மாட் டோம் என ஆட்சியாளர் கள் செயல்படுகிறார்கள்.
அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோ ருக்கான சலுகைகளை மறுப்பதையும் கண்டிக் கின்ற வகையில் நாங்கள் பேரவையைப் புறக்க ணித்து வெளிநடப்புச் செய்துள்ளோம்.
இவ்வாறு ஜவாஹி ருல்லா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று (31.1.2014) ஆளுநர் உரை யைப் புறக்கணித்து பேர வையிலிருந்து வெளி நடப்புச் செய்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆண்டு தொடக் கத்தில்பேரவையில் ஆளு நர் உரையை புதியதமிழ கம் கட்சி புறக்கணித்து வெளிநடப்புச் செய்து உள்ளது.
காரணம், சட்ட மன்றத்தில் அறிவிக்க வேண்டியவற்றை யெல்லாம் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் அறிக்கையாக வெளி யிட்டு சட்டமன்றத்தின் மரபை உதாசினப் படுத்தி வருவது ஜனநாயகத்திற்கு முரணானது.
அதுமட்டுமின்றி, ஓமந்தூரார் தோட்டத் தில் உள்ள புதிய தலை மைச் செயலகத்தை மருத் துவமனையாக மாற்றுவ தாக அறிவித்தார்கள். அங் குமருத்துவப் பேராசிரி யர் பணியிடங்கள் நிய மனத்தில் இடஒதுக்கீட்டு முறையை முழுமையாகப் புறக்கணித்துவிட்டார்கள்.
தமிழகத்தில்கடும் வறட்சியினால் தொழிலா ளர்கள் இந்த ஆட்சியில் எந்த நன்மையும் பெற முடியாமல் தவிக்கின்ற னர். தொழிலதிபர்கள் இந்த மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு  செல் லும் நிலை ஏற்பட்டுள் ளது. இதனை அரசுக்கு உணர்த்தும் வகையில் பேர வையைப் புறக்கணித்துள் ளோம். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக