ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 3 பிப்ரவரி, 2014

சட்டப்பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு!






சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தொழில் முதலீட்டாளர்கள் மீது தமிழக அரசு அக்கறை செலுத்தவில்லை என புகார் தெரிவித்தார்.

இந்த புகாருக்கு அமைச்சர் உரிய விளக்கம் தராததால் வெளிநடப்பு செய்ததாக கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரை தி.மு.க., தே.மு.தி.க புறக்கணித்துள்ள நிலையில், கிருஷ்ணசாமியும் வெளிநடப்பு செய்துள்ளார்.

மேலும், மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக