ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 1 பிப்ரவரி, 2014

ஆளுநர் உரையைப் புறக்கணித்து புதிய தமிழகம் கட்சி வெளிநடப்பு!

இன்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு வழங்காத தமிழக அரசைக் கண்டித்து சட்டசபையிலிருந்து ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி "தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு வழங்காதது, தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்படக்கூடிய உயர் சிகிச்சை மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனஙளில் இட ஒதுக்கீடு கடைபிடிக்காதது, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவி இருக்கக்கூடிய கடுமையான வறட்சி, குடிநீர் பஞ்சம், தமிழகத்திலே இருந்து பெரும்பெரும் தொழிலதிபர்கள் இந்த மாநிலத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயருவது ஆகியன குறித்து எந்த விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசைக் கண்டித்து இன்று புதிய தமிழகம் கட்சி சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறது" என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக