ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 25 மார்ச், 2014

ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியின் தென்காசி நாடாளுமன்ற தொகுதி..செயல்வீரர்கள் கூட்டம்..

ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியின் தென்காசி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளார் டாக்டர்.கிருஷ்ணசாமி எம்.டி. அதிக வாக்கு வித்தியாசத்தில் எவ்வாறு வெற்றிபெறச் செய்வது தொடர்பாக சட்ட மன்றத் தொகுதிகள் வாரியாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தோழமைக் கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று (23.3.14) சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான செயல்வீரர் கூட்டம் சங்கரன்கோவில் கிருஷ்ணா அரங்கில் திரையரங்கில் மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

இதில் தி.மு.க மாவட்ட கழகச் செயலாளர் திரு.கருப்பசாமிபாண்டியன், தி.மு.க. தென்காசி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு.டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஆவுடையப்பன் உள்ளிட்ட திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சி, புதிய தமிழகம் முதலிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக