ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 29 மார்ச், 2014

தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். அவரது அறிமுகக் கூட்டம்..

விருது நகர்:-லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வைத்து எம்.பியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால் குற்றாலத்தை சர்வதேச சுற்றுலா தலமாக்குவேன் என்று தென்காசி தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்;கடந்த 40ஆண்டுகாலமாக தென்காசி தொகுதியில் எந்த விதமான வளர்ச்சியும் ஏற்படவில்லை நான் வெற்றி பெற்றால் மேற்க்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வீணாய் கேரளமாநிலக் கடலில் கலக்கும் 30ஆயிரம் டி.எம்.சி.தண்ணீரை கிழக்கு நோக்கித்திருப்பிவேன்.இதன் மூலம் வறட்சியாய் இருக்கும் தென்மாவட்டங்களை வளமான பகுதியாக மாற்றிட முயற்சி மேற்கொள்வேன்.மேலும் நம் பகுதியில் எலுமிச்சை,திராட்சை,மலர்கள் மதிப்புக் கூட்டக் கூடிய பொருட்களாக மாற்றமுடியாத நிலையுள்ளது.இதனை மாற்றிட முயற்சிகொள்வேன்.குற்றாலத்தை உலக அளவில் சர்வதேச சுற்றுலா மையமாக மாற்றிட முயற்சி மேற்கொள்வேன் விருதுநகர்-கொல்லம் அகல ரயில்பாதை பணியை விரைந்து முடிக்க செய்து மின் பாதையாக மாற்றி தென்மாவட்டங்கள் பொருளாதாரத்தில் உயர முயற்சி மேற்கொள்வேன் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக