ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 17 ஏப்ரல், 2014

தேர்தல் விதிமுறை மீறல்: டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு


தென்காசி பாராளுமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இவர் நேற்று இரவு ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் பிரசாரம் செய்தார். இரவு 10 மணிக்கு மேல் அவர் பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி முத்தையா தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதில் டாக்டர் கிருஷ்ணசாமி தேர்தல் விதிமுறை மீறி இரவு 10 மணிக்கு மேல் அதிக வாகனங்களில் சென்று பிரசாரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தனுஷ்கோடி, செட்டியார் பட்டி தி.மு.க. நகர செயலாளர் தங்கபாண்டியன், ராமராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தேர்தல் விதிமுறை மீறல்: டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக