ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 28 ஜூன், 2014

தேர்தல்முறையில் மாற்றம் தேவை- வாக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதிகளை தேர்வுசெய்ய வேண்டும் - டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ பேட்டி



புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் விதிமுறைகளை மாற்றவேண்டும். ஏனென்றால்மக்களிடம் போதிய அளவில் வாக்கு சதவீதம் பெற்ற பல தலைவர்களால் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற முடியவில்லை. சமீபத்தில் நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் 39 சதவீதம் வாக்குகள் பெற்ற பாரதிய ஜனதாமத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. 25 சதவீதம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ்பகுஜன் சமாஜ்சமாஜ்வாடிஜே.டி.யு.இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போய்விட்டது. தமிழகத்திலும் இதே நிலைதான். 43 சதவீதம் வாக்குகள் பெற்ற அதிமுக 37 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 19சதவீதம் வாக்கு மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா கூட்டணி 2 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஆனால், 25 சதவீதம் வாக்குகள் பெற்ற திமுக கூட்டணிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. அதிக வாக்குகள் பெற்றும் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடுகிறது. 

எனவேஇத்தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.அந்தந்த கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்திற்கு ஏற்பபிரதிநிதிகளை தேர்வுசெய்ய வேண்டும். இந்நடைமுறை நார்வேஸ்பெயின்டென்மார்க்ஸ்வீடன்,சுவிட்சர்லாந்துஜெர்மனிநேபாளம் உள்ளிட்ட 89 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இம்முறையை அமல்படுத்தும்போதுஉண்மையான ஜனநாயகம் காக்கப்படும்.இதுநாட்டின் வளர்ச்சிக்கு உதவும். இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும்

இத்தேர்வு முறை வேண்டும் என திமுக 1999ம் ஆண்டே குரல் கொடுத்தது. இந்த எண்ணம் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள்தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோரை ஒன்றுசேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய தேர்தல் முறையில் மாற்றம் பற்றிய பிரசார நிறுவனம் என்ற அமைப்பு இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் தலைவர் எம்.சி.ராஜூ இந்தியா முழுவதும் சென்று தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவர்இன்று கோவையில் என்னை சந்தித்து ஆதரவு கோரினார்.

நாங்கள் ஒன்றுசேர்ந்துமுதல்கட்டமாகதமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுதமிழக தலைவர்களை ஒன்றுதிரட்டி கருத்தரங்கு நடத்த உள்ளோம். மிக விரைவில் தேதிஇடம் அறிவிக்கப்படும். பின்னர்தேசம் தழுவிய இயக்கமாக இதை விரிவுபடுத்துவோம்.

இவ்வாறு டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக