ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 21 செப்டம்பர், 2015

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னர் ... டாக்டர் அய்யா அவர்களின் உ ரைவீச்சு

..தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் டாக்டர் .அய்யா அவர்களின் எழுச்சி உ ரை...20 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இவ்விழா இன்று உலக அளவில் பேசப்படுகிறது. இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அல்லது நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என 20 வருடங்களாக கோரி வருகிறோம். சட்டப்பேரவையில் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த பயனும் இல்லை.
2010 இல் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசியபோது, பிரிந்து கிடக்கும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே இனமாக அறிவிக்க வேண்டும். இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தினோம்.
இந்த 3 கோரிக்கைகளுக்கும் சம்மதம் தெரிவித்ததால் கூட்டணி வைத்தோம். ஆனால் இதுவரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக