ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 21 செப்டம்பர், 2015

செப் .11... மாவீரர் மண்ணில் தேவேந்திர குல மக்களின் மாற்றங்கள் ...!!!!!...

செப் .11... மாவீரர் மண்ணில் தேவேந்திர குல மக்களின் மாற்றங்கள் ...!!!!!... எந்த ஒரு வன்முறை சம்பவத்திற்கும் இடம் தராமல் அமைதியாக .வீர வணக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள் .. "தேவேந்திரர் பண்பாட்டு கழகம் " ஏற்பாடு செய்த சீருடை அணிந்த தொண்டர்கள் அலைகடல் என வந்த கூட்டத்தை கட்டுபடுத்தினர் ... காவல் துறை வெறும் பார்வையாளர்களாக இருந்தனர் ... கட்டுப்பாடு , சுய ஒழுக்கம் , அமைதியான முறையில் கோரிக்கை முழக்கங்கள் , தலைவர்களின் சிறப்பான வழிகாட்டல்கள் ,தேவேந்திரர் சமுகத்தின் நடவடிக்கைகளை அனைத்து தமிழ் சமூகமும் பாராட்டித்தான் ஆக வேண்டும் ... நேர்மையான காவல்துறை அதிகாரிகள் இப்படிப்பட்ட மக்களையா 2011ல் சுட்டு கொன்றோம். என்று நினைக் கிறார்கள் .... அன்று காலை முதல் மாலை வரை காவல்துறைக்கு வேலையே இல்லை .. இது ஒன்று போதாதா அரசு விழாவாக அறிவிக்க ...பல்வேறு அமைப்பினர் வரவேற்பு பதாகைகள் வைத்து இருந்தனர் .. அதில் பெரும்பாலும் "தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை ".. மதுரை விமான
நிலையத்திற்கு "இம்மானுவேல் சேகரன் பெயர் ".. தியகியாரின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் நிறைவை தருகின்றன .... இறுதியாக பல்வேறு தடைகளை தாண்டி வீர வணக்கம் செலுத்திய குரலற்றவர்களின் குரல் .. டாக்டர் . க .கிருஷ்ணசாமி .. M .D .M .L .A ., அவர்கள் நம் மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றும் வகையில் நிறைவுரை ஆற்றினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக