ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 21 செப்டம்பர், 2015

வாதிரியார்... தேவேந்திர குல வேளாளர் சமுகத்தில் ஒரு பிரிவே ..!!!!........

...1956 ஆம் ஆண்டு அரசு வெளியட்ட தாழ்த்தபட்டோர் (பட்டியல் சாதி) பட்டியலில் பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் சாதி சேலம் , கோவை மாவட்டகளில் மட்டும் உள்ளதாக குறிப்பிடபட்டிருந்தது.
வரலாறு தெரிந்த சான்றோர்களான நம் முன்னோர்கள் வாதிரியார் பள்ளரின் உட்பிரிவு என்பதையும் ,
வாதிரியார் நெல்லை ராமநாதபுரம் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் அரசுக்கு மனு செய்தனர்.
அரசும் மனுவை ஏற்று ஆய்வு செய்து கோரிக்கை உண்மை என்பதை ஏற்று பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் மாநிலம் முழுமையும் தாழ்த்தபட்டோர் என்று 1957 ஆம் ஆண்டு ஆணையிட்டனர்.
ஆனால் இந்த உண்மையை மறைத்து வாதிரியார் சாதி தாழ்த்தபட்டோர் பட்டியலில் 1976 இல் தான் சேர்க்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக ( நம்மை ..... நினைத்து ) இன்று வரை ஏதோ உள்நோக்கத்துடன் சிலர் கூறி வருகிறார்கள்
இவர்களை வரலாறு மன்னிக்க கூடாது

1 கருத்து: