ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 21 மார்ச், 2011

முதுகுளத்தூரில் ஜான்பாண்டியன் போட்டி

முதுகுளத்தூர்:தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன், முதுகுளத்தூரில் கூட்டணிக் கட்சி ஆதரவுடன் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.அவர் கூறியதாவது:சட்டசபை தேர்தலில் மூன்றாவது அணியாக யாதவ மகா சபை, எங்களது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயக கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி ஆகியோரது கட்சிகள் இணைந்து, தேர்தலை சந்திக்கிறோம்.இந்த மூன்றாவது கூட்டணி கட்சி சார்பில், தமிழகத்தில், 13 இடங்களிலும், நான் முதுகுளத்தூரிலும் போட்டியிடுகிறேன். மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள், வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும்.இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக