ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 26 மார்ச், 2011

ஓட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர்.கிருஷ்ணசாமி பிரசாரம்









ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி ஓட்டு சேகரித்தார்.



ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி புதியதமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் க.கிருஷ்ணசாமி நேற்று புதூர்பாண்டியாபுரம் பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். புதூர்பாண்டியாபுரம் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.



பிரசாரத்துக்கு மோகன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், அ.தி.மு.க. தொகுதி செயலாளர் புகழும்பெருமாள், மாநில அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எஸ்.டி.பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வேலாயுதபுரம், சில்லாநத்தம், புதியம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக