ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 26 மார்ச், 2011

நெல்லை தொகுதியில் பசுபதி பாண்டியன் போட்டி

அகில இந்திய தேவேந்திர குல கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் நெல்லை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.இவர் நேற்று மாலை நெல்லை கோட்டாட்சியர் ராஜபிரபாகரனிடம் மனுதாக்கல் செய்தார்.



நெல்லை தொகுதியில் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதி பாண்டியன் போட்டியிடு கிறார்


அவரது மனுவை முன்மொழிந்த 10 நபர்களில் ஒருவர் பாளை தொகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இன்று காலை மீண்டும் கோட்டாட்சியரிடம், பசுபதி பாண்டியன் மனுதாக்கல் செய்தார். அவருடன் மாநகர செயலாளர் வண்ணை முருகன்,தென்மண்டல அமைப்பாளர் பொன்ராஜேந்திரன் ஆகியோர் உடன் வந்தனர்.





அதே போல் நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏஎல்எஸ் லட்சுமணனுக்கு மாற்று வேட்பாளராக மாநகர துணை செயலாளரும்,நெல்லை பகுதி செயலாளருமான உலகநாதன் இன்று மனுதாக்கல் செய்தார். இதே போல் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் மதனுக்கு மாற்று வேட்பாளராக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் லட்சுமணன் மனுதாக்கல் செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக