ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 30 மார்ச், 2011

ஒட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டி




அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஒட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இது குறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-



அ.தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறோம். நிலக்கோட்டையில் மாவட்ட தலைவர் ஆ.ராமசாமி போட்டியிடுவார். ஒட்டப்பிடாரத்தில் நான் போட்டியிடுகிறேன். நாளை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, ஒட்டப்பிடாரத்தில் பிரசாரத்தை தொடங்க இருக்கிறேன். தொடர்ந்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறேன். கூட்டணி கட்சிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்வது குறித்து கூட்டணி தலைமை தான் அறிவிக்க வேண்டும். எங்கள் கூட்டணி சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றியை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக