ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 30 மார்ச், 2011

2 தொகுதிகளில் ஜான் பாண்டியன் போட்டி




தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் முதுகுளத்தூர், நிலக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். மேலும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. ஜான்பாண்டியன் பாளையங்கோட்டையில் நேற்று மாலை கூறியதாவது:-



இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், சமூக சமத்துவ பறை, வாணிப செட்டியார் பேரவை, வ.உ.சி. பேரவை, அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு ஆகிய 6 கட்சிகள் இணைந்து இந்திய ஜனநாயக முன்னணி என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கூட்டணிக்கு இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டணி வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்திய ஜனநாயக முன்னணி கூட்டணியில், எங்கள் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.



நாங்கள் 8 பொதுத்தொகுதிகளிலும், 8 தனித்தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். பொதுத்தொகுதிகளிலும் எங்கள் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் முடிவு அமையும். முதுகுளத்தூர் (பொதுத்தொகுதி), நிலக்கோட்டை (தனித்தொகுதி), ஆகிய 2 தொகுதிகளில் நான் போட்டியிடுகிறேன். மேலும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவிக்கிறேன்.



ஸ்ரீவைகுண்டம்- சாந்திதேவி, போடி நாயக்கனூர்- முகமது ஷாபி, உடுமலைப்பேட்டை- கண்ணன், ராஜபாளையம்- கருப்பசாமி, சூளூர்- அலெக்ஸ் பாண்டியன், சிங்காநல்லூர்- கலைச்செல்வி, அருப்புக்கோட்டை- கலைச்செல்வன், பெரியகுளம்- நல்லுசாமி, பரமக்குடி- சந்தோஷ்குமார், சங்கரன்கோவில்- ராஜேந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர்- கண்ணன், துறையூர்- பி.சம்பத்குமார், அவினாசி- ரங்கசாமி, சோழவந்தான்- ஏ.ஜவகர். இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக