ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 2 மார்ச், 2011

சென்னை: பசுபதி பாண்டியன் கைது



முதல்வர் வீட்டு முன்பு சாகும் வரை உண்ணாவிரதமிருக்க போவதாக அறிவித்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.



தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, அந்த பெயரில் தனிப்பட்டியல் உருவாக்க வேண்டுமென தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன், முதல்வர் கருணாநிதி வீட்டு முன் காலவரையற்ற உண்ணாவிரதமிருக்க போவதாக அறிவித்தார். தொடர்ந்து, பசுபதி பாண்டியன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கிலிருந்து முதல்வர் வீடு நோக்கி செல்ல முற்பட்டவர்களை, போலீசார் கைதுசெய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக