.jpg)
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் திருச்சியில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்து உள்ளது.
அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வை ஆதரிப்போமோ என்பதை இப்போது சொல்ல முடியாது.
தஞ்சையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்தது தவறு. அதனை இடித்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி பரமக்குடியில் காவல் துறையினரால் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது பற்றி விசாரணை நடத்துவதற்காக நீதிபதி சம்பத் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் ஒரு இடத்தில் காவல் துறையை பாராட்டியும், இன்னொரு இடத்தில் காவல் துறையை கண்டித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தஞ்சையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்தது தவறு. அதனை இடித்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி பரமக்குடியில் காவல் துறையினரால் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது பற்றி விசாரணை நடத்துவதற்காக நீதிபதி சம்பத் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் ஒரு இடத்தில் காவல் துறையை பாராட்டியும், இன்னொரு இடத்தில் காவல் துறையை கண்டித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி சார்பில் மாவட்டம் தோறும் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி மாநாடு நடத்தப்பட உள்ளது" என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக