ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 22 நவம்பர், 2013

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தற்காப்பு நடவடிக்கையே: விசாரணை அறிக்கையில் தகவல்


சென்னை: "பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தற்காப்பு நடவடிக்கைதான்" என்று சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை கமிஷன் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையினர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் பயனளிக்கவில்லை என்றும், நடவடிக்கைகள் பயனில்லாமல் போனதால் துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிடப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வன்முறையை தடுக்க துப்பாக்கிச்சூடு அவசியமாக இருந்தது என விசாரணை ஆணையம் கருதுகிறது என்றும், துப்பாக்கிச்சூடு நடத்தாமல் இருந்திருந்தால் தென் மாவட்டங்களுக்கு வன்முறை பரவியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக