ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 18 நவம்பர், 2014

தென் தமிழகத்தில் 3 மாதத்தில் 66 கொலைகள்: தமிழக அரசை கலைக்கவேண்டும் - கிருஷ்ணசாமி



மதுரை:  தென் தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 66 கொலைகள் நடந்துள்ளன புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. தென் தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 66 கொலைகள் நடந்துள்ளன. இதில் 26 பேர் தேவேந்திரர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதில் நாடார், யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்களும் அடங்கும் ஆகும்.

அதிகாரிகள் துணையோடு இந்த கொலைகள் நடந்துள்ளதால் தமிழக அரசு கலைக்கப்பட வேண்டுமென்று ஆளுனரிடம் மனு கொடுக்க போகிறேன். இந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் பின்னணி பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க நீதிமன்றத்தில் முறையிடப் போகிறேன்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக