ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 10 மார்ச், 2015

செண்பகவல்லி அணைக்கட்டை சீரமைக்க வலியுறுத்தி புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்..

திருநெல்வேலி: செண்பகவல்லி அணைக்கட்டின் உடைப்பை சீர்செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் வாசுதேவநல்லூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள செண்பகவல்லி அணைக்கட்டின் ஒரு பகுதி கேரள மாநில வனப்பகுதிக்குள் வருகிறது. அணையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உடைப்பினால் தமிழகத்திற்குள் தண்ணீர் வரத்து பாதிப்படைந்துள்ளது. எனவே உடைப்பை சரிசெய்தால் நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதனை வலியுறுத்தி வாசுதேவநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இதுகுறித்து சட்டசபையில் பேச உள்ளதாக தெரிவித்தார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக