ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 25 மார்ச், 2015

ஒரு பொதுவுடமை தோழரின் ஆதங்கம்............... மள்ளர் குலத்தில் பிறந்த பொதுவுடமை போராளி S.G.முருகையன்தேவேந்திரர் புறக்கணிப்பு ஏன்?

ஆதிக்க மனம் படைத்த கயவர்
களால் படுகொலை செய்யப்பட்ட
நாகை தொகுதியின் முன்னாள்
எம்.பி.அய்யா சித்தமல்லி முரு
கையன்தான் இந்தப்படத்திலுள்
ளவர்...

இந்திய கம்யூ.கட்சி சார்ந்த அய்யா ஒரு தூய தமிழர்...
எளியவர்..பண்பாளர்....
கட்சியின் புகழை உலகமெல்லாம்
கொண்டு சேர்த்தவர்..
இந்தியாவின் முதல் ஒடுக்கப்ப
ட்ட இனத்து ஒன்றிய பெருந்தலை
வர்...
கீழத்தஞ்சையில் கட்சியை வளர்
த்தெடுத்தவர்...
1977-ஆம் ஆண்டு பொதுத்தேர்
தலில் போட்டியிட்டு வெற்றி
பெற்றவர்...
உலகிலேயே முதன்முறையாக
32 மைல் நீளத்திற்கு ....
மன்னார்குடி-முத்துப்பேட்டைக்
கு தன் தொகுதி மக்கள் பல்லாயி
ரம் பேரை திரட்டி ஒரே நாளில்
சாலை போட்டவர்...
இந்தச்செயலுக்காக சோவியத்
நாட்டிற்கு பதினைந்து நாள்
சுற்றுலா செல்லும் வாய்ப்பை
பெற்றவர்...
நில உச்சவரம்பு சட்டத்தை
நடைமுறைப்படுத்த பெரும்
சமர் புரிந்தவர்...
சாதி கடந்தவர்...எளியவரிலும்
எளியவர்...
47 - ஆண்டுகள் உயிரோடு இருந்து ரத்தமும் சதையுமாய்
மக்களோடு மக்களாக பணி செய்த தோழரை...தமிழரை...
வாழுங்காலம்வரை குடிசையில்
வாழ்ந்த கோமகனை...
நட்ட நடுநிசியில் பேருந்திலிருந்
து இறங்கி வீட்டிற்கு வரும்போது
வெட்டி வீழ்த்தியது ஒரு கும்பல்..
அன்றைய முதல்வர் M G R
இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு எட்டு மணி நேரத்திற்
கும் மேல் சித்தமல்லியில் இருந்து இறுதிச்சடங்கு முடிந்த
பிறகே கிளம்பினார்....
மக்கள் வெள்ளத்தில் நீந்திச்
சென்று அய்யாவின் உடல் அடக்
கம் செய்யப்பட்டது....
அப்பேர்பட்ட இந்த மாமனிதரின்
மரணத்திற்கு பின்னால்...
அவர் சார்ந்த இந்திய கம்யூ.கட்சி
செய்ததென்ன...
எங்கிருந்தோ வந்த சீனிவாசராவு
க்கு மணிமண்டபம் கட்ட வைத்த
கட்சி....
மண்ணின் மைந்தர் அய்யா முருகையனை கைவிட்டது ஏன்...
N C B H- சார்பாக அய்யா விற்கு
ஒரு சிறு நூல்கூட வெளியிட முடியாமல் உங்களை தடுப்பது
எது...
கார்ப்பரேட் நிறுவனம் போன்று
சென்னையில் நீங்கள் கட்டியிரு
க்கும் பெருங்கட்டடத்தின் ஒரு
தளத்திற்குக்கூட அய்யாவுடைய
பெயரை சூட்டமுடியாதா உங்க
ளால்...
வழக்கை மேல்முறையீட்டுக்கு
கூட கொண்டு செல்ல முடியாத
அளவிற்கு கட்சியை தடுப்பது
எது....
விமானவிபத்தில் மரணமடைந்த
தோழர்.பாலதண்டாயுதம் நினை
வாக ...பாலன் இல்லம் வைத்தி
ருக்கும் நீங்கள்....
படுகொலை செய்யப்பட்ட அய்யா
முருகையன் நினைவாக நீங்கள்
வைத்திருப்பது என்ன...?
பாவம் எங்கள் அய்யா...
எஸ்.ஜி.எம்...
உங்களை இனியும் நம்பாமல்
நாங்கள் களத்தில் இறங்கும்
நேரம் நெருங்குகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக