ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 14 மார்ச், 2015

தமிழகத்தில் அகல ரயில்பாதை திட்டங்கள் முடங்கி உள்ளன : கிருஷ்ணசாமி....

மத்திய அரசின் தங்க நாற்கர சாலை திட்டத்தில் கோவை,கரூர் மாவட்டங்களை இணைக்க வேண்டும் என்று இன்று மார்ச் 14-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
போத்தனூர்-பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தேவையான நிதியை வரும் ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.திண்டுக்கல்லிருந்து கோவை, சத்தி வழியாக மைசூர் வரைச்சாலைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.அதேபோல், கோவை பல்லடம், காங்கயம், வெள்ளகோவில், கரூர் வழியாக திருச்சிக்கு நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மாவட்டம் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை தங்க நாற்கர சாலைத்திட்டத்தில் இணைப்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேலை வாய்ப்பை பெறுவார்கள். இத்தகைய, கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக்கட்சிகள், பல்வேறு அமைப்பினர், வணிகர்கள் மற்றும் பொதுமக்களையும் ஒன்று திரட்டி கோவை ரயில் நிலையம் முன்பாக இன்று (மார்ச் 14-ஆம் தேதி) புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக