ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 10 மார்ச், 2015

செண்பகவல்லி அணைக்கட்டை சீரமைக்க வலியுறுத்தி புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்..

தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் அவதியடைந்து வருகிறார்கள். அரசு நிர்ணயித்த விலையை கூட முறையாகவோ, சரியான காலத்திலோ கொடுக்காமல் தனியார் சர்க்கரை ஆலைகள் இழுத்தடிக்கிறார்கள். கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3,500 தமிழக அரசு வழங்க வேண்டும்.
மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள செண்பகவல்லி அணை கடந்த 40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகள் வறட்சிக்கு ஆளாகியுள்ளன. ஆகவே, அந்த அணையைச் சீரமைக்க மத்தியஅரசு, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக