ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 13 செப்டம்பர், 2012

இமானுவேல் சேகரன் நினைவு நாள் பாதுகாப்பு வளையத்தில் பரமக்குடி




பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (செப்.11) இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி  தினத்தையொட்டி குருபூஜை நடக்கிறது. அரசியல் கட்சி உள்பட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி  செலுத்த உள்ளனர். அஞ்சலி செலுத்த வசதியாக கட்சி வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு செப்டம்பர் 11ல் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை 5 முனை பகுதியில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை  அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் இறந்தனர்.
இம்முறை அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கவும்,  பாதுகாப்பை அதிகரிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். 

டிஐஜி ராமசுப்பிரமணியன் தலைமையில் மதுரை, கோவை, சேலம் உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில்  இருந்து 15க்கும் அதிகமான எஸ்பிக்கள் பரமக்குடி வந்துள்ளனர். பரமக்குடி 5 முனை சாலை, ஆர்ச் பகுதி,  பஸ் ஸ்டாண்ட், இமானுவேல் நினைவிடம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி  நிகழ்ச்சிகள் கண்காணிக்கப்படுகிறது. அசம்பாவிதங்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  பரமக்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக