ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

ஓட்டப்பிடாரத்தில் ஸ்டேட் பாங்க் விரைவில் துவக்கம் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தகவல்

ஓட்டப்பிடாரம், : ஓட்டப்பிடாரத்தில் பாரத ஸ்டேட் பாங்க் விரைவில் துவக்கப்பட உள்ளதாக கிருஷ்ணசாமி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓட்டப்பிடாரத்தில் இது வரை எந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையும் துவக்கப்படவில்லை. வட்டார வளர்ச்சி அலுவல கம், தாலுகா அலுவலகம், பதிவு துறை, பள்ளிகல்வி, பொதுப்பணித்துறை உள் ளிட்ட எத்தனையோ அலுவலகங்கள் இருந்தும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர் கள், சத்துணவு பணியாளர் கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு இருந் தும் வங்கி இல்லாதது குறை யாகவே இருந்து வந்தது.
ஆசிரியர்கள் தேசிய வங்கி இல்லாத காரணத் தால் தமிழகத்திலேயே ஓட்டப்பிடாரத்தில் மட்டுமே இசிஎஸ் மூலம் சம்பளம் பெற முடியாத நிலை உள் ளது. வியாபாரிகளும், விவசாயிகளும் சாதாரண செல் லான் எடுக்க கூட அங்கிருந்து 20 கி.மீ அப்பால் செல்ல வேண்டிய துள்ளது. கடந்த 15 மாத காலமாக பாரத ஸ்டேட் பாங்கின் நெல்லை, சென்னை, மும் பை கிளை அதிகாரிகளிடம் நான் வலியுறுத்தியதன் பேரில், இப் போது ஓட்டப்பிடாரத்தில் ஸ்டேட் வங்கி கிளை துவக்க அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் வங்கி செயல்பட துவங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக