ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

அ.தி.மு.க.,வினர் அஞ்சலி

பரமக்குடி:பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில், அ.தி.மு.க., சார்பில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, டாக்டர் சுந்தரராஜ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயலாளர் ஆணிமுத்து, சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா, நகர் செயலாளர் ஜமால், எம்.ஜி,.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் முனியசாமி உட்பட பலர் உடன் வந்தனர்.தி.மு.க., -பா.ம.க., -பா.ஜ.,- ம.தி.மு.க., -காங்.,-புதிய தமிழகம்- விடுதலை சிறுத்தைகள்-தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்-, நாம் தமிழர் இயக்கம், லோக் ஜனசக்தி-, பகுஜன் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.நேற்று காலை முதல் இரவு வரை பரமக்குடியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.பிற்பகலிலிருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக