ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 13 செப்டம்பர், 2012

இமானுவேல் சேகரன் நினைவு நாள் பரமக்குடியில் பலத்த பாதுகாப்பு




பரமக்குடி : கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 பேர் பலியானதையொட்டி, இமானுவேல் சேகரன் நினைவு தினமான இன்று பரமக்குடியில் பாதுகாப்புக்காக 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி குருபூஜை நடக்கிறது. அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் நினைவு அஞ்சலி செலுத்த உள்ளனர். இதற்காக கட்சி வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 11ல் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை 5 முனை பகுதியில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்தனர். இம்முறை அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் போலீசார் விரிவான நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பரமக்குடியில் மெற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து மதுரையில் ஏடிஜிபி ஜார்ஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதையடுத்து டிஐஜி ராமசுப்பிரமணியன் தலைமையில் மதுரை, கோவை, சேலம் உள்பட  முக்கிய நகரங்களில் இருந்து 15க்கும் மேற்பட்ட எஸ்பிக்கள் பரமக்குடி வந்துள்ளனர். 10 ஆயிரம் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நினைவிடம் உட்பட 3 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி  கண்காணிக்கப்படுகிறது. பள்ளி, கல்லு£ரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட் டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக