ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

கிரானைட் முறைகேடு ரூ.16,000 கோடி அல்ல ரூ.1,80,000 கோடி: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

நெல்லை: மதுரையில ரூ.16,000 கோடி அல்ல ரூ.1, 80,000 மதிப்புள்ள கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மதுரை மாவட்டத்தில் ரூ.16,000 கோடி மதிப்பிலான கிரானைட் கற்கள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்து அரசு அதிகாரிகள் தற்போது ஆய்வு நடத்தி வருகின்றனர். உண்மையில் 1,80,000 கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள குளங்கள், சுடுகாடுகள், கோயில்கள் ஆகியவற்றின் வழிப்பாதைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் 16ம் தேதி சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக