ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 22 செப்டம்பர், 2010

•சிவில் சப்ளை அதிகாரி முருகன்தேவேந்திரர் சாவில் மர்மம் : சிபிஐ விசாரணை கோருகிறார் டாக்டர் க..கிருஷ்ணசாமி!

தூத்துக்குடி சிவில் சப்ளை அதிகாரியின் மரணத்தில் மர்ம முடிச்சுகள் இருப்பதாக கூறி சிறப்பு புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவு விட வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். இது குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,சிவில் சப்ளை அதிகாரியின் மரணத்தில் மர்ம முடிச்சுகள் இருப்பதாக தெரிகிறது.எனவே இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவு விட வேண்டும் என்றார். அவருடன் மனித உரிமை ஆர்வலர்களும்,வியாரிகள் சங்க பொது செயலாளர் நடராஜன்,பேராசிரியை பாத்திமா பாபு மற்றும் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக