ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

தியாகி இம்மானுவேல் சேகரன்

1957 செப்டம்பர் 11 அன்று பாரதி நினைவு நாள். அவரது நினைவு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த இம்மானுவேல் சேகரன் என்ற ஒரு இளைஞரை ஒன்றினைந்த ராம நாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடி நகரில் 33 வயது நிரம்பிய ஒரு மாவீரனை ஒரு கோழையர்கள் கூட்டம் வெட்டி வீழ்த்துகிறது. அப்போது காங்கிரசின் காமராஜர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தலித் மக்களுக்கான விடுதலைக்காக போராடத்துவங்கிய கொஞ்ச நாட்களிலேயே அந்த முன்னாள் ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டார். 2010 செப்டம்பர் அன்று அவரது 53 ஆவது நினைவு நாள். பரமக்குடியில் அரசு ஊழியர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிய ஒரு சமாதியில் அஞ்சலி நிகழ்ச்சி வருடாவருடம் அதாவது கடந்த 53 வருடங்களாக நடந்து வருகிறது. கடந்த ஆறேழு வருடங்களாகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்து அஞ்சலி செலுத்தும் தலித் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது என்று மருதமலர் ஆசிரியர் உமாசங்கர் குறிப்பிடுகிறார். இந்த முறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமேற்பட்டு செப்டம்பர் 11 அன்று பரமக்குடி வரை சென்று வர ஒரு மகிழுந்துவில் விருது நகரிலிருந்து நண்பர் வைரமணி மற்றும் விருது நகர் முன்னாள் கவுன்சிலர் மகேந்திரன் அகியோருடன் சென்றேன். கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் சாரை சாரையாக மக்கள் வெள்ளம். லோடு வேன், கார், பஸ், லாரி இருசக்கர வாகனங்கள், நடை என்று கூட்டமோ கூட்டம். நாங்கள் பரமக்குடி அரசு மருத்துவ மனைக்கு மேல் வாகனத்தில் செல்ல முடியவில்லை. ஒரு நான்கு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் காட்டுப்பரமக்குடி தாண்டி நடந்து சென்றோம். வழியெங்கும் ஃப்ளக்ஸ் போர்டுகள் சுவரொட்டிகள். ஆதித்தமிழர் பேரவை, விடுதலைச்சிறுத்தைகள் போன்ற இயக்கங்களின் சார்பாக வாழ்த்து சுவரொட்டிகள். 76 வகையான தலித்துகளில் பிரதானமாக அறியப்படுவது பள்ளர், பறையர், சக்கிலியர் அநேகமாக இந்த மூன்று சாதியினரும் பங்கேற்கும் மாபெரும் விழாவாக இருக்கிறது இந்த குருபூசை நிகழ்ச்சி. குறைந்த எண்ணிக்கையிலான குறவர், புதிரைவண்ணான் போன்ற மற்ற தலித்துகளும் விடுபடாமல் கலந்து கொண்டது முக்கியத்துவம் பெறுகிறது. ஐந்தில் ஒரு பகுதியாக அறியப்படும் தலித்துகளின் ஒன்று பட்ட எழுச்சியைப்பார்ர்க முடிந்தது. அரசு விழாவாக இந்த குருபூசை நிகழ்ச்சியை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கூட வலுவாக எழுந்திருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். ஏனெனில் ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்கள் ஒருங்கிணைந்து வருகிறது என்பது தான் ஆதாரம். 2/2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக