ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 27 செப்டம்பர், 2010

பூலித்தேவன்: அண்ணன் மு கருணாநிதி

கட்டபொம்மனின் தளபதிகளிலே ஒருவர் வெள்ளையத் தேவன்-அவருடைய ஆருயிர் நண்பன் சுந்தரலிங்கம். சுந்தரலிங்கம்,மள்ளர் என்ற தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். வெள்ளையத் தேவனும் வீரன் சுந்தரலிங்கமும் இணைந்து பல போராட்டங்களை வெள்ளைக்காரர்களை எதிர்த்து நடத்தி இருக்கின்றார்கள். கட்டபொம்மனைக் காப்பாற்றுவதற்காக, வெள்ளையத் தேவனைக் காப்பாற்றுவதற்காக தன்னைத் தானே மாய்த்துக் கொள்கின்ற தற்கொலைப் படை வீரனாக மாறி உயிர் நீத்தது வீரன் சுந்தரலிங்கம்.

கட்டபொம்மனுக்கு நான் கோட்டை கட்டியவன் மாத்திரமல்ல. அந்தச் சுந்தரலிங்கத்திற்கும் சுந்தரலிங்கம் நகர் என்ற ஒரு நகரை நிர்மாணித்து அண்மையிலே திறந்து வைத்தவன்தான் நான். ஏன் சொல்கிறேன் என்றால், அந்தப் போராட்டத்திலே வெள்ளையத் தேவன், சுந்தரலிங்கம்மள்ளர் என்ற தேவேந்திர குல வேளாளர் ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து நின்று உரிமைப் போராட்டத்தை நடத்த முடிந்தது.

அதைப்போலத்தான் பூலித்தேவனுக்கு உதவியாக முன்னணியில் இருந்தவர்கள் பகடை ஒண்டி வீரன், வெண்ணிக்காலாடி- இவர்கள் இருவரும்மள்ளர் என்ற தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதுமாத்திரமல்ல, இவர்களுடன்தேவேந்திரகுல சமுதாயத்தைச் சேர்ந்த தளபதிகள் 350 பேர் பூலித் தேவனுக்கு உதவியாக இருந்தார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.கருணாநிதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக